அவனதிகாரம் - 24
அதிகாரம் – 24 சிறு வயது அபிமன்யு தங்கள் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது வேலுச்சாமி வள்ளியம்மையையும், கிருஷ்ணமூர்த்தியையும் அவர்களின் ஊர் திருவிழாவிற்கு அழைத்து செல்ல வந்திருந்தார். வந்தவரை கிருஷ்ணமூர்த்தி தன் வார்த்தைகளால் காயப்படுத்தியும், அவமானப்படுத்தியும் திருப்பி அனுப்பி வைத்தார். அதனை பார்த்த சிறு வயது அபிமன்யுவிற்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும், ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டவன். வேலுச்சாமி சென்றவுடன் நேராக கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று, “ தாத்தா, யார் அந்த புது தாத்தா வந்துட்டு போறாங்க? நீங்க ஏன் அவங்களை திட்றீங்க ” என்று விவரம் அறியாமல் கேட்டான். அனைத்தையும் இவன் பார்த்துவிட்டதை கேட்டு திகைத்த கிருஷ்ணமூர்த்தி நொடியில் ஒரு புது கதையை உருவாக்கி விட்டார். ஆரம்பத்தில் உறவுகளின்மை, குழந்தையின்மையினால் மீராவை அங்கிருந்து அழைத்து வந்து விட்ட கிருஷ்ணமூர்த்தி, தற்பொழுது மீரா வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டதால் எங்கே என்றேனும் ஒரு நாள் வேலுச்சாமியோ, மரகதமோ வந்து உண்மையைக் கூறி அழைத்து சென்...