அவனதிகாரம் - 5
அதிகாரம் – 5 தன் தாயின் அறிவுரைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு வெண்ணிலா அமைதியாக இருந்தாள். லட்சுமி, “ சரி மா, விளக்கேத்திட்டு சாமி கும்பிடு ” என்றார். வெண்ணிலாவும் தன் தாய் சொல் படி அனைத்தும் செய்தாள். சாமி கும்பிட்டு முடித்ததும் வெண்ணிலாவின் தோழிகளை அழைத்தார் லட்சுமி, “ வெண்ணிலாவை அவளோட அறையில் கொண்டு போய் விட்டுடுங்கமா ” . செல்லும் வழியெல்லாம் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு வெண்ணிலாவை அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் பேசியது தான் எதுவுமே வெண்ணிலாவை சென்றடையவில்லை. அவள் தான் வேறொரு எண்ணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாளே. தோழிகளில் ஒருத்தி, “ ஏய் வெண்ணிலா, என்ன டி என்ன யோசிச்சிக்கிட்டிருக்க.. நாங்க பாட்டுக்கு என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு எதுவுமே கண்டுக்காமல் எதையோ யோசிச்சிக்கிட்டு வர ” . அதற்கு, வெண்ணிலா பதில் கூறும் முன் இவர்கள் தோழிகளில் இன்னொருத்தி, “ அவளுக்கு இப்போ நம்ம நினைப்பெல்லாம் எங்கடி இருக்கும். அவ ஜீவா அண்ணாவை பத்தி மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருப்பா ” எ...