அவனதிகாரம் - 91
அதிகாரம் – 91 அபிமன்யு, “ அவ நிஜமாவே என்னை சைட் அடிச்சிருந்தா கூட, அதுல உனக்கு என்ன பிரச்சனை யாழினி? நீ ஏன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு ப்ரூஃப் பண்ண இவ்வளவு மெனக்கெடுற ” . “ அதான் சொன்னேனே... அந்த பொண்ணோட லைஃபை காப்பாத்த தான் இப்படி பண்ணேன் ” . அபிமன்யு அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, “ அவளுடைய வாழ்க்கையை நீ காப்பாத்துறியா... ஜஸ்ட், பார்க்குறதால அவளோட வாழ்க்கை வீணா போயிடுமா என்ன... அவளுடைய வாழ்க்கையை காப்பாத்த பார்க்குறியா? இல்ல, உன்னுடைய வாழ்க்கையை காப்பாத்திக்க பார்க்குறியா? ” . அபிமன்யுவின் கேள்வியில் யாழினிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அவனின் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்றபடி, “ இங்க பாருங்க, நீங்க தேவையில்லாம பேசாதீங்க. நீங்க ஒன்னும் அந்த அளவுக்கு வொர்த் இல்ல. அதனால தான் அவளே ஆரியனைப் பார்த்து இருக்கா. நான் தான் ஏதோ குழப்பத்துல இப்படி எல்லாம் நடந்துகிட்டேன் ” என்றவள். தன்னைத்தானே திட்டிக் கொண்டாள், ‘ லூசு.. லூசு... நீயே இப்படி வாயை கொடுத்து நல்லா மாட்டிக்கிட்டியே.. போ, இதை வச்சு உன்ன ந...