அவனதிகாரம் - 59
அதிகாரம் – 59 அன்று அபிமன்யு கோபமாக யாழினியை அவளின் வீட்டிலிருந்து அழைத்து வந்த பிறகு அவளின் பெற்றோருக்கும், தாத்தா, பாட்டிக்கும் பெரும் வருத்தமாகிப் போனது. சில நாட்கள் கழித்து லட்சுமி, “ என்னங்க இப்போ தான் மாப்பிள்ளை கொஞ்சம் மனசு மாறுன மாதிரி தெரிஞ்சது. அதுக்குள்ள இந்த கயல் என்ன என்னமோ பேசி திரும்ப அவரை கோபப்படுத்திட்டாளே ” என்றார் வருத்தமாக. “ மூணு பேரையும் நாம ஒரே மாதிரி தான வளர்த்தோம் லட்சுமி. இவள் மட்டும் ஏன் இப்படி இருக்கானு தெரியலையே. ரெண்டு பொண்ணுங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கு . இவ அவளுக்கு புடிச்ச வாழ்க்கை தான் வேணும்னு போனா, இப்போ வந்து கஷ்டப்படுறேன்னு கண்ணை கசக்கிக்கிட்டு நின்னா நம்ம என்ன பண்ண முடியும். அவங்களுக்கு பண உதவி செய்யுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல லட்சுமி. ஆனா, உன் பொண்ணுக்கு இன்னும் திமிர் அதிகமாயிடும். நம்மகிட்டயே இந்த பேச்சு பேசுறா அவ, அங்க இருக்கவங்களை எப்படி மதிப்பா. எங்க அப்பா வீட்டில் இருந்து வந்தது தானே இதெல்லாம்னு அவங்க கிட்ட திமிரா நடந்துக்கிட்டா அவ வாழ்க்கையே அதனால் வீணா போக கூட சந்தர்ப்...