இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 86

    அதிகாரம் – 86   அபிமன்யு சென்ற பிறகு யாழினி அறைக்கு செல்வதற்காக கீழே இறங்கி வர. அவளை வழிமறித்து நின்றனர் ஸ்வேதா, ஆரணி, ஆரியன்.   யாழினி மனதிற்குள், “ ஐஐயோ...! இவங்கள மறந்துட்டோமே... எப்படி இவங்கள சமாளிச்சு ரூமுக்கு போறதுன்னு தெரியலயே ” என்று திருதிருவென விழித்தாள்.   ஆரியன், “ என்ன இப்படி முழிக்கிற... உன் முழியே சரியில்லையே.. ” என்றான் யாழினியைப் பார்த்து.   ஸ்வேதா, “ என்கிட்ட என்ன சொன்ன. இந்த டு டேஸ் என்கூட ஸ்பென்ட் பண்றேன்னு சொல்லிட்டு, நீயும் அண்ணாவும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” என்று மாற்றி மாற்றி கேள்வி கேட்க.   யாழினி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள்.   ஆரணி, “ என்ன யாழினி பதில் சொல்லாம இப்படி முழிக்கிற ” .   யாழினி, “ என்ன பதில் சொல்றது. என்கிட்ட கேட்கிறதெல்லாம் போய் உங்க அண்ணன் கிட்ட கேளுங்க. எப்போ பார்த்தாலும் என்னையே நிக்க வச்சு கேள்வி கேட்க வேண்டியது ” .   ஆரியன், “ என்ன.. அவர்கிட்ட நாங்க கேட்க மாட்டோம்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? எங்களுக்கு யாராயிருந்தாலும்...

அவனதிகாரம் - 85

    அதிகாரம் – 85   யாழினி ஸ்வேதாவின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள், “ என்ன ஸ்வேதா ஏதோ பேசணும்னு கூப்பிட்டு வந்துட்டு ஒண்ணுமே பேச மாட்டேங்குற ” .   “ நீ சந்தோஷமா இருக்கியா யாழினி? ” .   “ நான் சந்தோஷமா தான் இருக்கேன். ஏன் இப்படி கேட்குற? ” .   “ ஏன்னா.. நான் சந்தோஷமாவே இல்ல டி ” என்றால் வருத்தமான குரலில்.   அதில் பதட்டமான யாழினி, “ என்னடி சொல்ற. ஏன் என்ன ஆச்சு? ” என்று கேட்க.   “ ஆமா டி. என் வீட்டுக்காரர் ரொம்ப கோவக்காரரா இருக்கார். அவங்க அம்மா என்ன சொல்றாங்களோ, அதை தான் டி கேட்கிறார். என்னுடைய பீலிங்க்ஸை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார். நான் எது சொன்னாலும், அவங்க அம்மாகிட்ட போய் கேட்டுட்டு அவங்க சரினு சொன்னா தான் செய்யுறார். அவங்க வேண்டாம்னு சொன்னா என்கிட்டயும் வந்து வேண்டாம்னு சொல்லிடுறார் ” .   “ ஓ.. ஆனால் அவரைப் பார்த்தா அப்படி தெரியலையே. நல்லா தான் பேசுறார் ” .   “ வெளியில் இருந்து பார்த்தா எல்லாம் நல்லா தான் இருக்கும். இப்போ கூட அவங்க அம்மா தான் சொல்லி அனுப்புனாங்க. போய் அவள அவங...