இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 97

    அதிகாரம் – 97   யாழினியின் நண்பர்கள் எதுவோ பிரச்சனை என்று எண்ணியவர்கள், “ யாழினி நாங்க அப்போ கிளம்புறோம். நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம் ” என்று கூறி விட்டு வெளியேற எத்தனிக்க.   அபிமன்யு, “ ஒரு நிமிஷம், எல்லாருக்கும் கீழ டின்னர்க்கு ரெடி பண்ணி இருக்கோம். சாப்பிட்டு போங்க.. ஆரியன், அவங்கள கூப்பிட்டு போய் பார்த்துக்கோ ” என்று ஆரியனையும் அவர்களுடன் அனுப்பி வைத்தான்.   ஆரியன் ‘ சரி ’ என்று தலையசைத்தவன், அவர்களை அழைத்துக் கொண்டு கீழே செல்ல.   வள்ளியம்மை பாட்டி கலங்கிய கண்களுடன், “ ஏங்க.. ஏங்க இப்படி எல்லாம் பண்றீங்க.. நம்ம பேத்திக்கு தானங்க பிறந்தநாள். உங்களுக்கு பிடிச்ச பேரனுடைய பொண்டாட்டி வேற. ஏன் இப்படி அவளோட மனசை நோகடிக்கிற மாதிரி நடந்துக்குறீங்க ” .   “ பேத்தியா.. யாருக்கு யாரு டி பேத்தி.. இவ எனக்கு பேத்தியா? ” .   இவரின் பேச்சில் சுப்பிரமணிக்கு கோபம் எழ.   விசாலாட்சிக்கு குதூகலமாக இருந்தது. இவ்வளவு நேரம் தான் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் தன் மனதை குளிர வைக்கிறார் என்று நடப்பவற்றை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொ...

அவனதிகாரம் - 96

    அதிகாரம் – 96   யாழினியால் தான் பார்க்கும் காட்சிகளை நம்பவே முடியவில்லை. மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. மொட்டை மாடி முழுவதும் அழகாக வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் நடுவே அலங்கரிக்கப்பட்ட டேபிளின் மீது அழகிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.   அதை சுற்றியும் யாழினியின் குடும்பத்தாரும், அபிமன்யுவின் குடும்பத்தாரும், யாழினியின் நண்பர்களும் நின்று இருந்தனர். அங்கும் அபிமன்யு தென்படவில்லை. யாழினி தன் கண்களாலேயே அலைபாய்ந்தபடி அபிமன்யுவை தேட.   யாழினிக்கு பின்னிருந்து அபிமன்யுவின் குரல் கேட்டது, “ என்னோட சர்ப்ரைஸ் எப்படி இருக்கு? ” .   அபிமன்யுவின் குரலில் எதிர்பார்ப்போடு திரும்பியவள். அப்பொழுது தான் அபிமன்யுவை வெளிச்சத்தில் பார்க்கிறாள்.   யாழினியின் உடைக்கு பொருத்தமாக அவனும் அதே நீல நிறத்தில் சட்டையும், கரு நீல நிறத்தில் கோட்டும், பேண்டும் அணிந்திருந்தான்.   தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் விட்டபடி அலை அலையான கேசம் காற்றில் ஆட, யாழினியை அவன் பார்த்த பார்வை யாழினியை முற்றிலுமாக ...

அவனதிகாரம் - 95

    அதிகாரம் – 95   யாழினி அவர்களிடம் தான் திருமண பத்திரிக்கையில் தங்கள் இருவரின் பெயரையும் எழுதியதைப் பற்றி கூறிவிட்டு, வெட்கப்பட்ட படி அமர்ந்திருக்க.   ஆரணி, “ இதுக்கு ஏன் நீ இவ்வளவு வெட்கப்படுற? உங்க ரெண்டு பேருடைய பெயர் தான எழுதுன... இதுல என்ன இருக்கு? ” என்றாள் புரியாமல்.   வெண்ணிலா, “ உன் வீட்டுக்காரர் அதைப் பார்த்துட்டு என்ன சொன்னார்? ” .   யாழினிக்கு, அபிமன்யு ‘ மீண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா ’ என்று கேட்டது மனக்கண் முன்பு வந்து போக, முகம் சிவந்தபடி அமர்ந்திருந்தாள்.   வெண்ணிலா, “ நீ கொடுக்குற ரியாக்ஷ்னைப் பார்த்தா, பெருசா எதுவோ நடந்திருக்கு போலருக்கு ” .   “ அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. சும்மா என்னையே கிண்டல் பண்ணாதீங்க. சும்மா தோணுச்சுன்னு எங்க பெயரை எழுதி பார்த்தேன் அவ்வளவு தான்... உடனே, எல்லாரும் அதையே சொல்லி என்னை கிண்டல் பண்ணாதீங்க ” .   ஆரணி, “ யாழினி, உனக்கு கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ப்ராப்பரா பண்ணனும்னு ரொம்ப எதிர்பார்த்தியா? ” .   “ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இதுவரைக்க...