இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 70

  அதிகாரம் – 70   அன்றே மீரா யாழினியிடம் ஆரணியின் அறையில் தங்கிக் கொள்ளும் படி கூறினார்.   “ ஏன் அத்தை என்ன ஆச்சு. நான் எதுக்கு ஆரணி அறையில் தங்கனும்? ” .   “ எல்லாம் உன்னுடைய நல்லதுக்காக தான் யாழினி பண்றேன் ” .   யாழினிக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. ‘என்னை எங்க வீட்டுக்கு அனுப்ப போறதா சொன்னாங்க. ஆனா, இப்போ ஆரணி ரூம்ல தங்க சொல்றாங்க. என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே. ஒருவேளை அத்தை மனசு மாறிட்டாங்களோ.   அப்புறம் ஏன் என்னை ஆரணி ரூம்ல தங்க சொல்றாங்க. ஒருவேளை, அந்த ஹிட்லர் என்னை அவர் ரூம்ல தங்க வைக்க கூடாதுனு அத்தை கிட்ட சொல்லி இருப்பாரோ? என்னை அடிச்சதுக்கு ஒரு சாரி கூட கேட்கல அவர். அத்தை சொல்ற மாதிரி இனிமே நான் ஆரணி கூடவே தங்கிக்குறேன் ’ என்று பலவாறு சிந்தித்த படி ஆரணியின் அறைக்கு சென்று விட்டாள்.   ஆரணி, “ ஹே யாழ், என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்க? ” .   “ அதுவா.. இனிமே நானும் உன் கூட தான் தங்க போறேன் ” .   யாழினி‌ கூறியதைக் கேட்டு சற்று அதிர்ச்சியான ஆரணி எதையோ மறைத்தபடி, “ என்ன திடீர்னு.. முன்னாடி...

அவனதிகாரம் - 69

    அதிகாரம் – 69   யாழினி, “ பாட்டி அத்தை என்னை நம்ம வீட்டுக்கு போக சொல்றாங்க. இவங்க நம்ம குடும்பத்தை கஷ்டப்படுத்த தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க ” .   மரகதம், “ நீ மீரா கிட்ட போனைக் குடு, நான் பேசுறேன் ” .   மீரா, “ ஹலோ ” .   “ மீரா எப்படி இருக்க? ” .   “ ம்ம் ” .   “ நாங்க பண்ணது தப்புன்னு நினைக்கிறியா மா? ” .   “ இல்ல.. ஆனா, எப்படி சொல்றதுன்னு தெரியல. என்னுடைய இத்தனை வருஷ வாழ்க்கையும் பொய் ஆயிட்ட மாதிரி இருக்கு. என்னை அம்மாவும், அப்பாவும் நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க. என் மேல அவ்வளவு பாசமா இருக்காங்க. இருந்தாலும், ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்த மாதிரி தோணுது.   என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமே. அப்பவும் நான் இவங்க பொண்ணா தான இருந்திருப்பேன். இப்படி மறைச்சு நான் சந்தோஷமா இருக்கணும்னு, எனக்கு எந்த உண்மையும் தெரியக்கூடாது என்பதற்காக ஒரு குடும்பத்தையே கஷ்டப்படுத்தி, ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கனும்னு நினைக்கிறதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்! ” .   ...