இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவனதிகாரம் - 40

    அதிகாரம் – 40   யாழினி, “ என்ன பேசணும்னு சொல்லுங்க பேசுறேன் ” என்றாள் அமைதியாக.   மரகதம் பாட்டி, “ என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்படி சோகமா இருக்க. வாழ்க்கையில சரி பண்ண முடியாத பிரச்சனைனு எதுவும் இல்லை யாழினி ” .   அவர் கூறியதை கேட்டு விரக்தியாக சிரித்த யாழினி, “ இனிமே என் வாழ்க்கையில என்ன நடக்கணும்னு நீங்க சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல. எல்லாமே மத்தவங்க விருப்பப்படி தான் நடக்குது.  இவ்வளவு நாள் உங்க விருப்பப்படி நடந்துச்சு. இனிமே, அவரோட விருப்பப்படி நடக்கப் போகுது அவ்வளவு தான். உங்க யாருக்கும் என்னை பத்தி எந்த கவலையும் இல்ல. அக்கா பண்ண தப்புக்காக எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு எல்லாரும் சேர்ந்து அவளோட தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்துட்டீங்க ” .   யாழினியின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த மரகதம் பாட்டி அவள் எந்த அளவிற்கு மனம் உடைந்து இருக்கிறாள் என்று அவளின் வார்த்தையிலேயே உணர்ந்தார்.   “ இப்படி எல்லாம் பேசாத யாழினி. இங்க இவ்வளவு பிரச்சனை இருக்கும்னு நாங்க யாருமே நினைச்சு கூட பார்க்கல. உன் வாழ்க்கை வீணா போகணும்னு நாங்களே நினைப்ப...

அவனதிகாரம் - 39

அதிகாரம் – 39   அனைவரும் அவரவர் வேலையை பார்க்க கலைந்து சென்றவுடன், கிருஷ்ணமூர்த்தி தாத்தா வள்ளியம்மையிடம் மரகதம் பாட்டியை பார்த்துக் கொண்டே, “ ஏய் வள்ளி, அபி தான் பிடிக்கலைனு சொல்றான்ல. இன்னும் எதுக்காக இவங்க இங்க இருக்காங்க. கிளம்பி போக சொல்லு ” என்று முகத்தில் அடித்தார் போல் கூறினார்.   அதற்கு வள்ளியம்மை பாட்டி பதில் பேசுவதற்கு முன்பே மரகதம் பாட்டி, “ நான் எதுக்குங்க போகணும். இது என் பொண்ணோட வீடு. பழசெல்லாம்... நீங்க மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். இப்போ நான் இங்க இருக்கிறது என் பேத்திக்காக. அவளுடைய வாழ்க்கை சரியானதும் நான் இங்க இருந்து போய்கிட்டே இருப்பேன் ” என்று கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.   கிருஷ்ணமூர்த்தி வள்ளியம்மையிடம், “ பாத்தியா.. எவ்வளவு திமிரா பேசிட்டு போறாங்கன்னு பாத்தியா.. இதுக்கு தான் இவங்களுடைய உறவே வேண்டாம்னு சொன்னேன். பொண்ணோட விடாமே... பொண்ணோட வீடு. யாருக்கு யாருடி பொண்ணு ” என்று எகிறினார்.   வள்ளியம்மை, “ அவங்க உங்ககிட்ட வந்து இது என் பொண்ணு வீடுனு உரிமை போராட்டம் நடத்துனாங்களா. நீங்க தான தேவையில்லாம வார்த்தையை வ...